Tuesday, December 22, 2009

அவர்களும் மனிதர்கள்தான் ...!!!!

இந்த விஷயம் ரொம்ப நாளாகவே என் மனதில் உறுத்திகொண்டிருந்தது. இன்றுதான் அதை பதிவு பண்ண ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. என்னடா இன்னும் விஷயத்தையே என்னன்னு சொல்லாம பினாத்திகிட்டு இருக்கானேன்னு சபிக்கறதுக்கு முன்னாடி சொல்லிடறேன் இது பாலியல் தொழிலாளர்களை பற்றியது.

அப்பப்ப தினசரிகளில் அழகிகள்(?) கைது அப்படின்னு கட்டம் கட்டி படத்தோட செய்தி வரும் அதுலவேற நம்ம தொப்பை போலீஸ் போஸ் கொடுத்துக்கிட்டு நிப்பாய்ங்க. அப்பத்தான் யோசனை வரும் அந்த பாவப்பட்ட அழகிகள் அப்படி என்ன குத்தம் செஞ்சிட்டாங்கன்னு இப்படி போட்டு மானத்தை வாங்குரானுகண்னு.

மும்பை கமிஷனர் ஒருவர் கூட ஒருமுறை சொன்னார். மும்பையில் இருக்கும் ஆண்களில் 60% பேர் பிரம்மசாரிகள் அவர்களுக்கு பெரும் வடிகாலாய் இருப்பது பாலியல் தொழிலாலர்கள்தான். அத்தொழிலை நிறுத்தினால் வீதியில் போகும் குடும்ப பெண்களுக்கு அது ஆபத்தாகிவிடும் என்று.

அப்படி உடல் அரிப்பெடுத்து சுகத்துக்காக அலையும் மனிதர்கள் மத்த குடும்ப பெண்களிடம் சில்மிஷம் செய்யாமல் தடுத்து அவர்களின் அரிப்பை தீர்த்து அதற்கு கூலியை பெற்றுக்கொள்கிறார்களே அதுவா பெரிய தப்பு? எதற்கெடுத்தாலும் போரடும் மனித உரிமை, மகளிர் அமைப்புகள் ஏன் இவர்கள் அவமானபடுத்துவதை மட்டும் பெரிதாக கண்டுகொள்வதில்லை என்று தெரியவில்லை

என்ன அவங்க வேற வேலையிருந்து அதை பண்ணாமய இந்த தொழிலுக்கு வராங்க. எதோ வயித்து பொழப்புக்கு வேற வழியில்லாம் இதை பண்ண வேண்டியதா இருக்குது. இதில்லாம வெறும் உடலைக்காட்டும் டான்ஸ் மட்டும் செஞ்சு குடும்பத்தை பார்த்துகலாம்னா அதுக்கும் அரசாங்கம்(மும்பை) ஆப்பு வெச்சிருச்சி. டான்ஸ் பார் தடைக்கு அப்புறம் பேட்டி கொடுத்த பெண்களெல்லாம் "எதோ உடம்ப மட்டும் காட்டி பொழப்ப பார்த்துகிட்டு இருந்தோம். இனி உடலை விக்கிறதை தவிர வேற வழியில்லை" என்று சொன்னார்கள். டான்ஸ் பார்களின் தடைகளினால் பாதிக்கப்பட்ட பெண்கள் 5000 கும் மேலயாம். எதோ கமிஷன் தகராறுல மும்பை அரசாங்கம் அவங்க வயித்தில அடிச்சிருச்சு.

இங்க தமிழ்நாட்டுல என்னடான்னா மாசக்கடைசியில் கேசு கிடைக்கலியா அவங்களை பிடித்து உள்ள போடு என்கிறமாதிரி கொதறிவிடுகிறார்கள். இதற்கு ஒரே தீர்வு இதை சட்டரீதியா அங்கீகரித்துவிடுவதுதான் என்று நினைக்கிறேன். கூடவே ஒரு லைசன்ஸ் முறையும் கொண்டுவந்திட்டா அவங்க சம்மதிமல்லாமல் தொழிலுக்கு அழைத்துவரப்படுகிறவர்களையும் காப்பாற்றி சம்பந்தபட்டவங்க மேல நடவடிக்கை எடுக்கலாம். எந்த அரசாங்கம் தைரியத்துடன் இதை செய்யப்போகிறதென்று தெரியவில்லை. பார்ப்போம்?

 -- சுதன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home